More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள ஆதரவு வழங்கத் தயார்!
இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள ஆதரவு வழங்கத் தயார்!
Sep 23
இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள ஆதரவு வழங்கத் தயார்!

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான உதவியைப் பெறுவதற்கு தமது ஆதரவை வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்தனர்.



ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கான தூதுவர்கள் கூட்டத்தில்  அவர்கள் இந்த உறுதிமொழியை வழங்கினர்.



23 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் Paris  கிளப்பின் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.



இந்த நிலையில் இருந்து இலங்கை மீள முடியும் என வெளிநாட்டு தூதுவர்கள் இதன்போது நம்பிக்கை வெளியிட்டனர்.



நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவாலை வெற்றிகொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த முயற்சியில் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.



மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க (IMF) மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்துடன்  நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கினர்.



அடுத்த சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக நாடு எதிர்கொள்ள வேண்டிய சவால் இது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.



வெளிப்படைத்தன்மை மற்றும் சமத்துவம் எல்லா நேரங்களிலும் உறுதி செய்யப்பட்டு பராமரிக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.



இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டியஇ தாரக பாலசூரிய, ஷெஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர், ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரத்நாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr15

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெளியிடப்பட்ட சுகாதார வழி

Sep15

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது தொடர் கடந

Sep10

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்க

May04

இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை

Mar01

எட்டு வயது சிறுமியொருவரை சுமார் 2 மாதங்களாக பாலியல் து

Apr06

பின்வத்தை வடுபாசல் தோட்டத்தில் வசிக்கும் 16 வயதுடைய சி

Apr20

கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்

Apr11

வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் நேற்று மாலை (10) யா

Oct15

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல

Feb25

நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வரை

Feb03

நடைபெறவிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்

Feb04

கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூன்று மாதக் குழந்தை உட்பட 13 ப

Mar05

பாடசாலை 3ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும

Mar21

காணாமல் போனதாக கூறப்படும் பம்பலப்பிட்டி – புனித பீட

Sep24

ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் மொஸ்கோவிற்கும் கட்டுந

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 03 (07:37 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 03 (07:37 am )
Testing centres