More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது- வவுனிநா நீதிமன்றம்!
வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது- வவுனிநா நீதிமன்றம்!
Sep 23
வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது- வவுனிநா நீதிமன்றம்!

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் புதிதாக படி அமைத்தமை, அதற்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை நேற்று வவுனியா நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.



வவுனியாஇ வடக்கு நெடுங்கேணியில் அமைவு பெற்றுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மக்கள் சென்று வழிபாடு செய்யவும், ஆலயத்தினை புனருத்தானம் செய்யவும் நீதிமன்றினால் தடைவிதிக்கப்பட்டதோடு, குறித்த ஆலயத்தில் புதிதாக அபிவிருத்தி செய்த குற்றசாட்டில் குறித்த ஆலய பூசகர், நிர்வாகத்தினர் மீதும் நெடுங்கேணி பொலிஸாரால் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.



அதற்கமைய நேற்றையதினம் குறித்த வழக்கானது வவுனியா நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்ட நிலையில், குறித்த வழக்கு தொடர்பாக சிவசேனை அமைப்பின் வன்னி பிராந்திய இணைத்தலைவர் தமிழ்த்திரு மாதவன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.



இதன்போது கருத்து தெரிவித்த அவர்இ வெடுக்குநாரிமலை ஆலய தலைவர், செயலாளர், பொருளாளர், பூசகர் குறித்த வழக்கிற்கு சமூகம் அளித்திருந்தார்கள்.



சட்டத்தரணி தயாபரன் தலைமையிலான எட்டு சட்டதரணிகள் குழாம் இதற்கு ஆதரவாக ஆஜராகியிருந்தார்கள். குறித்த வழக்கில் நெடுங்கேணி பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.



அதில் பொலிஸ் சாஜனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர், குறித்த பிரச்சினைக்கு அரசியல் தலையீடே காரணம் என கூறியிருந்தார்.



அத்தோடு குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆலய நிர்வாகத்தினர், பூசகர் இதற்கு காரணம் இல்லை எனவும் குறித்த ஆலயத்தில் பூசைக்கு தடையில்லை எனவும் இதற்கு காரணமான உண்மையான குற்றவாளி யார் என்பதை எதிர்வரும் மாதம் 13 ஆம் திகதிக்கு முன்பதாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் பொலிஸாருக்கு வவுனியா நீதிமன்ற நீதவானால் உத்தரவு பணிக்கப்பட்டிருந்தது.



மேலும் ஆலயங்களில் சிலர் அரசியல் நடத்துவதே குறித்த பிரச்சினைக்கான காரணம் என்றும் ஆலயங்களின் வழக்கத்தின்படி ஒரு ஆலயத்தில் நித்திய பூஜைகள் கட்டாயம் நடைபெற வேண்டும் என்றும் நீதவானால் தெரிவிக்கப்பட்டது.



தொல்பொருள் திணைக்களத்தின் விளம்பரப் பலகையும் இதையே சுட்டிக்காட்டியுள்ளதாகவும் கூறியிருந்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar08

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக நகல் எ

Feb09

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முதற்கட்டமாக இம்மாதத்தின

Mar07

பரபல போதைப்பொருள் வியாபாரியான ஹைபிரிட் சுத்தா என்பவர

Feb15

போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள

Feb11

நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை (14 -02-2022) வரை மின் விநிய

Oct21

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் வடக்கு மாகாணங்க

Feb09

இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் வன்முறையை துாண்டும் வ

Feb07

தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்த

Jan30

மன்னார் மாவட்டத்திலும் சுகாதார துறையினருக்கும் கொவி

Feb09

நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்

Mar11

குருணாகலில் காட்டு யானையின் தாக்குதலுக்கு புதுமண தம்

Sep26

போராட்டங்களை நடத்தி மக்கள் துன்புறுத்தப்பட்டால் பொல

Feb06

கண்டி மாநகர எல்லைப் பகுதியில் உள்ள மஹியாவை பகுதியின்

Apr26

நாட்டிற்கு பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்த

Jul16

மன்னார் காவற்துறை பிரிவின் மூன்று இடங்களில் உள்ள கத்த

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 03 (07:39 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 03 (07:39 am )
Testing centres