நாட்டில் விநியோகிக்கப்படும் திரிபோஷா தயாரிப்புகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அஃப்லாடாக்சின் இரசாயனம் இல்லை என ஸ்ரீலங்கா திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.
திரிபோஷாவின் தரம் குறித்து எந்த சந்தேகமும் இருக்க வேண்டாம் என்றும் திரிபோஷா உட்கொள்வது பாதுகாப்பானது என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
திரிபோஷாவில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட புற்றுநோயை ஏற்படுத்தும் அஃப்லாடாக்சின் உள்ளது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.
தாய்மார்கள் மத்தியில் அச்சத்தை பரப்புவதற்காக இட்டுக்கட்டப்பட்ட கதை இது என்றும் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் உணவுப் பற்றாக்குறை சூழ்நிலையில் இதுபோன்ற போலியான அறிக்கைகள் தாய்மார்களின் மனநிலையை குலைத்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரிபோஷா பொதியில் திருப்தியடைந்த தாய்மார்கள் உள்ளனர் என்றும் எனவே திரிபோஷா உண்ணுவதற்கு அச்சப்பட வேண்டாம் என தாய்மார்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திரிபோஷா தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் கூட ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவாக மாறியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவ
கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவை நேர அட்டவணை மற
நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று (01) முதல்
மக்கள் அடித்து விரட்டினாலும், தாக்கினாலும் அனைத்தயும
பொதுமக்களின் பிரச்சினைக்கு இந்த அரசிடம் தீர்வு ஏதுமி
உலக அரசியல் போட்டிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் தி
உலகில் பெண்களின் உரிமைகளுக்காக ஒரு தினம் கொண்டாடப் பட
பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை சட்ட விரோதமானது அல
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பா
நாட்டில் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் மலைய
தமது தோட்டப்பகுதியில் உள்ள நூறு ஏக்கர் காணி தனியாருக்
இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது மு
நாட்டில் இன்றைய தினமும்(8.03) சில வலயங்களுக்கு ஏழரை மணிநே
ஹுங்கம கடற்பரப்பில் ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உ
