More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • சிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு மூழ்கியதில் 61பேர் உயிரிழப்பு!
சிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு மூழ்கியதில் 61பேர் உயிரிழப்பு!
Sep 23
சிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு மூழ்கியதில் 61பேர் உயிரிழப்பு!

சிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர்கள் பயணித்த படகு மூழ்கியதில் 61 புலம்பெயர்ந்தோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக லெபனான் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.



உயிர் பிழைத்த 20 பேர் தெற்கு சிரியாவின் டார்டஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.



வியாழக்கிழமை படகு மூழ்கியபோது அதில் 120 முதல் 150 பேர் வரை பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



விபத்துக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் இன்னும் கூறவில்லை ஆனால் கடினமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும் மீட்பு முயற்சி நடந்து வருகிறது.



லெபனான் துறைமுக நகரமான திரிபோலிக்கு அருகிலுள்ள மின்யேஹ் நகரிலிருந்து கப்பல் புறப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.



ஐரோப்பாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது மூழ்கியதாக நம்பப்படும் படகில், லெபனான், சிரிய மற்றும் பாலஸ்தீனிய நாட்டினர் பயணித்ததாக கூறப்படுகின்றது. இதில் சில பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குகின்றனர்.



லெபனானில் 1.5 மில்லியன் சிரிய அகதிகளும் மற்ற நாடுகளைச் சேர்ந்த 14000 அகதிகளும் இருப்பதாக ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையர் தெரிவித்துள்ளது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான அகதிகள்இங்கு வசிக்கின்றனர்.



எவ்வாறாயினும் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது கொவிட்-19 மற்றும் 2020 பெய்ரூட் துறைமுக வெடிப்பு ஆகியவற்றால் தூண்டப்பட்டது. 80 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் உணவு மற்றும் மருந்துகளை வாங்க சிரமப்படுகிறார்கள்.



இந்த நிலைமை நாட்டின் புலம்பெயர்ந்த மக்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்களில் பலர் ஐரோப்பா உட்பட வேறு இடங்களுக்கு தப்பிச் செல்லத் தேர்வு செய்கிறார்கள்.



இந்த மாத தொடக்கத்தில் லெபனானில் இருந்து ஐரோப்பாவுக்கு குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு துருக்கியின் கடற்கரையில் மூழ்கியதில் குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். நான்கு படகுகளில் இருந்து 73 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan26

இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு  நிரந்தமா

May27

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல

Mar24

ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல்கள் மேரியோபோல் நகரையே

Feb27

நாட்டிற்குள் நுழைந்துள்ள ரஷ்ய வீரர்களை குழப்பி திசைத

Mar09

ரஷ்ய படைகளின் தாக்குதலால் உக்ரைனில் இதுவரை 61 மருத்துவ

Feb01

எத்தியோப்பியாவின் வடக்கு பிராந்தியமான டைக்ரேயின் மு

May23

வடகொரியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ உயர் அ

May31

உக்ரைனிலிருந்து மற்றுமொரு தொகுதி ஏதிலிகள் விமானம் ஊட

Mar16

ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா

Mar24

துபாயில் பொதுமக்கள் மத்தியில் இதயநோய் குறித்த விழிப்

May21

மரியுபோல் நகரில் அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்

Mar18

உக்ரைன் - ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான நிலைமையை

Feb02

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிரு

Apr07

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்

Mar22

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து க

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (19:40 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (19:40 pm )
Testing centres