ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியிலிருந்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நீக்கப்பட்டதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் உரையாற்றிய ஜயசுமண,
கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்பட்டமைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமே நீக்கப்பட வேண்டியவர். பீரிஸ் அல்ல என குறிப்பிட்டார்.
மார்ச் 04 அன்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவியில் இருந்து பேராசிரியர் பீரிஸை நீக்குவதற்கான கட்சியின் நிறைவேற்று சபை ஏகமனதாக தீர்மானித்ததாக காரியவசம் அறிவித்தார், மேலும் வெற்றிடமான பதவியை யார் நிரப்புவது என்பதை தீர்மானிக்க சபை இந்த வாரம் கூடவுள்ளது.
எனினும், கட்சியின் நிறைவேற்று சபையினால் இவ்வாறான தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவே இந்த தீர்மானங்களை எடுக்க முடியும் எனவும் விளக்கமளித்துள்ளார்.
மேலும், பேராசிரியர் பீரிஸின் நியாயமற்ற பதவி நீக்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளதாகக் கூறினார்.
சாகர காரியவசத்திற்கு கட்சியின் கொள்கைகள் தெரியாது. இறுதியில் கட்சி மற்றும் செயலாளர் பதவி இரண்டையும் பேராசிரியர் பீரிஸிடம் கொடுத்துவிட்டு சாகர காரியவசம் வீட்டுக்குச் செல்ல வேண்டும்” என்று பேராசிரியர் ஜெயசுமண கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதி
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி
யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உ
தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண
மன்னார்- சாவக்கட்டு கிராமத்திற்குள் நுழைந்த இளைஞர் கு
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கான அமெ
கேகாலை- எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவுக்கு உட்பட்ட எட
இலங்கையின் 33ஆவது பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய மஹிந
கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெடிகந்த வீதி - இரத்ம
இலங்கையில் இதுவரை 16 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட
வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம் உயிர் ஆபத்த
அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதர
வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்த
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் தனது கடமைகளை
இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடனுதவி அளிப்பதாக இந்தியா அறிவித
