உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதிக் கோரிக்கை கடிதம், நிதி அமைச்சரான ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாக நிதி அமைச்சின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
முன்னதாக நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு நிதி வழங்குவதற்கு நிதி செயலாளரின் அனுமதியே போதுமானது என நிதிச் செயலாளர் தமக்கு அறிவித்திருந்தாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், தேவையான நிதி, உரிய காலத்தில் வழங்கப்படும் என நம்புவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தல் 2023க்காக 2023 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட எந்தவொரு நிதியையும் தடுத்து நிறுத்துவதைத் தடுக்கும் வகையில் இலங்கையின் உயர் நீதிமன்றம் மார்ச் 3 ஆம் திகதி நாட்டின் நிதிச் செயலாளர் மற்றும் நிதி அமைச்சரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்த நிலையிலேயே தற்போதைய கடிதப்பரிமாறல்கள் இடம்பெறுகின்றன.
ஏற்கனவே 203, மார்ச் 9 இல் திட்டமிடப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் நிதிப் பற்றாக்குறையால், ஏப்ரல் 25 மாற்றப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் பொது இடங்களில
எந்த வித தாமதமும் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் உ
இரணைதீவிற்கு மக்கள் சென்று வருவதில் காணப்படுகின்ற கெ
வட மாகாணத்தில் மாவட்டங்களுக்கு இடையே கால்நடைகளை கொண்
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குப் போத
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 343 ப
கோப்பாய் சமிக்ஞை விளக்கு சந்தியில் இரண்டு கனரக வாகனங்
Aflatoxin அடங்கியுள்ள திரிபோஷா அழிக்கப்பட்டுள்ளதனால்,
கொவிட் தொற்று காரணமாக பல்வேறு நெருக்கடிக்குள்ளான 289
வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எத
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தான் விரும்பியவாறு ஜனாதிப
முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 08 அமைச்
தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம
பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எரி சக்தி அமைச்சர்
