உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதிக் கோரிக்கை கடிதம், நிதி அமைச்சரான ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாக நிதி அமைச்சின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
முன்னதாக நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு நிதி வழங்குவதற்கு நிதி செயலாளரின் அனுமதியே போதுமானது என நிதிச் செயலாளர் தமக்கு அறிவித்திருந்தாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், தேவையான நிதி, உரிய காலத்தில் வழங்கப்படும் என நம்புவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தல் 2023க்காக 2023 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட எந்தவொரு நிதியையும் தடுத்து நிறுத்துவதைத் தடுக்கும் வகையில் இலங்கையின் உயர் நீதிமன்றம் மார்ச் 3 ஆம் திகதி நாட்டின் நிதிச் செயலாளர் மற்றும் நிதி அமைச்சரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்த நிலையிலேயே தற்போதைய கடிதப்பரிமாறல்கள் இடம்பெறுகின்றன.
ஏற்கனவே 203, மார்ச் 9 இல் திட்டமிடப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் நிதிப் பற்றாக்குறையால், ஏப்ரல் 25 மாற்றப்பட்டுள்ளது.
இந்நாட்டில் 2005ம் வருடத்தில் இருந்து தலைவிரித்தாடிய ரா
நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ம
இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் அர்த
தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாக
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட
இலங்கையில் கார் உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் செலு
விக்டோரியா மற்றும் ரந்தெனிகல நீர்த்தேக்கங்களில் இரு
நுவரெலியா - நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ
மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து குருநாகலுக்கு க
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு, ஒத்துழைப்பதாக த
பொதுநலவாய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் இலங்கை பிரதி
மட்டக்களப்பு வவுணதீவு காவற்துறை பிரிவிலுள்ள பாவக்கொ
யாழ்ப்பாணம்இ நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமார
பிரதமர் மகிந்த ராஜபக்ச எவ்வேளையிலும் பதவி விலகுவதற்க
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட
