பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சிலருக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (மார்ச் 13) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது கொழும்பு, தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தைச் சுற்றியுள்ள வீதிகளை மறித்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று காலை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, வீரகுமார திஸாநாயக்க, பியசிறி திஸாநாயக்க, மொஹமட் முஸம்மில், ஜயந்த சமரவீர உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியமைக்காக விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்
திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) வ
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் வசிக்க
இந்திய விசாவை பெருந்தொகையான பணத்திற்கு வழங்கிய குற்ற
தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்
நாட்டில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கில
அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்ல
இலங்கை மின்சாரத்துறை பாரிய நெருக்கடியை நோக்கிச் செல்
ஜப்பான் அரசின் நிதியுதவியில் யாழ். பல்கலைக்கழக கிளிநொ
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும், சபை முதல்வருமான தினே
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் உண்மையான நோக்க
பேருவளை பிரதேசத்தில் 45 நாட்களுக்கு முன்னர் நரி கடித்த
கரிபீயனில் ஒரு சிறிய இரட்டை தீவு தேசமான செயிண்ட் கிட்
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்
இலங்கையில் டெங்கு வைரஸிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளத
