கண்டி தனியார் பாடசாலையொன்றில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை அதிபர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களே சம்பவத்தில் தாக்கப்பட்டுள்ளனர் என்றும், கண்டி பிரதேச சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) இரவு பெண்கள் விடுதிக்குள் இரகசியமாக ஐந்து மாணவர்கள் நுழைந்ததாகவும் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கையின் போதே மாணவர்கள் தாக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, மாணவிகளின் சம்மதத்துடனேயே மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் தாக்குதலுக்கும் கொடுமைக்கும் ஆளாகியிருப்பதாகவும் அவர்களின் தலைமுடி கூட வெட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் விடுதி காப்பாளர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் மார்ச் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியொ
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் உண்மையான நோக்க
வவுனியா- செட்டிகுளம் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தி
வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய வளாகத்தி
எரிவாயுவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்
அரசு அபிவிருத்திக்குப் பதிலாக நாட்டுக்கு அழிவைக் கொண
கிளிநொச்சி வட்டக்கட்சி மாயனூர் காட்டுப் பகுதியில் பு
சாவகச்சேரியில் திருமணமான 3 மாதத்திலேயே இளம் பெண்ணொருவ
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பணிகள் ம
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எந்தவித அனுபவமோ,
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை பிரித்தானியா
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதி
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர
பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிம்
யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகரும் நகைக்கடை உரிமையாள
