நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவு (Kermadec Islands) அருகே இன்று (16) காலை ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படி, கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், 300 கிலோமீட்டர் சுற்றளவிற்கு மக்கள் யாரும் வசிக்காத இந்த தீவின் கரையோரப் பகுதிகளில் அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெலிங்டன் அருகே 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசுபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் அமைந்திருப்பதால், அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. இருப்பினும், நாடு முழுவதும் நிலநடுக்க அளவில் மாறுபாடு உள்ளது. Ring Of Fire என்று அழைக்கப்படும் தீவிர நில அதிர்வு நடவடிக்கையின் விளிம்பில் நியூசிலாந்து உள்ளதால், தீவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பூகம்பங்கள் ஏற்படுகின்றன.
கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின
சீனாவின் தெற்கு குவாங்சி மாகாணத்தில் கடந்த மார்ச் மாத
ரஷ்யாவை தொடர்ந்து ஆதரித்தால் சீனா மிகப்பெரிய விளைவுக
சீனாவில் 133 பேருடன் பயணித்த விமானம் விழுந்து விபத்துக்
தீவிர வலதுசாரி பிரதர்ஸ் ஒஃப் இத்தாலி கட்சியின் தலைவரா
உக்ரைன் - ரஷ்ய மோதல்கள் ஆரம்பமான இரண்டொரு தினங்களில் ர
ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனின் 4 பிராந்தியங்கள் உ
ஐரோப்பியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை கண்ட
ஆப்கானிஸ்தானின் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஏ
ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் சர்வதேச அரசியலில் பெரும
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுவிட்சர்லாந்து
உக்ரைனில் பொதுமக்கள் பதுங்கியிருந்த பாடசாலை ஒன்றில்
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்திய
தடுப்பூசிகளை செலுத்துவதற்காக திட்டங்களை வெளியிட அதி
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் தொடர்ச்சியாக இரண்டு மணி
