வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் நுகயாய பகுதியில் நேற்றிரவு இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கெப் ரக வாகனமொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 44 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள், 42 வயதான அவரின் மனைவி மற்றும் 70 வயதான தந்தை ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த சிறுவனொருவன் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கெப் வாகனத்தின் சாரதி மது போதையில் வாகனத்தை செலுத்தியுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதுடன், கெப் சாரதியிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
விபத்து தொடர்பில் கெப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
அளுத்கம பகுதியில் கடலில் நீராடச் சென்ற சிறுவன் நீரில்
ஒக்டோபர் மாத முதல் பாதியில் சுற்றுலாப் பயணிகளின் வருக
இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அவரத
இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களை மோதவிட்டு ராஜபக்ச
நாளை முதல் இனிவரும் காலங்களில் எந்தவொரு சமையல் எரிவாய
மின் வெட்டு வேளையில் அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட பின்னா்
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ப
எதிர்காலத்தில் அவசர சத்திரசிகிச்சைகளிற்கு தேவையான ம
இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தமையை மகிழ்வுட
சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கு மக்கள் அ
சர்வதேச நீர் தினமான இன்று சுற்றாடல் பாதுகாப்பின் முக்
நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட மக்களின
ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் நோயாளர்கள் மீது மின் விச
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி மற்
