கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியர் போல் நடித்து பல்வேறு நபர்களை ஏமாற்றி பணம் வசூலித்த நபரை பொரளை பொலிஸார் நேற்று (05) கைது செய்துள்ளனர்.
இந்த சந்தேக நபர் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் உட்பட மேலும் இருவர் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் உள்ள ஆப்பிள் தோட்டத்தில் வேலைக்கு அனுப்புவதாக கூறி வைத்தியர் போல் நடித்து 65,000 ரூபா பணத்தை மோசடி செய்ததாக மருதானையை சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
அவ்வாறே குருநாகல் பகுதியைச் சேர்ந்த ஒருவரை அவுஸ்திரேலியாவில் உள்ள ஆப்பிள் தோட்டத்தில் வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 50,000 ரூபா பணம் கேட்டுள்ளனர்.
சந்தேகநபர் தனக்கு இரண்டு ஆப்பிள் தோட்டங்கள் இருப்பதாகவும், இருவருக்கு அங்கு தொழில் செய்ய வாய்ப்பு தருவதாக கூறி இந்த இருவரிடமும் மோசடியாக பணம் பெற்றுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நேற்று (05) கைதுசெய்யப்பட்டதுடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தாம் போலி வைத்தியர் என ஒப்புக்கொண்டார்.
மேலும் முறைப்பாட்டாளர்களிடம் தீர்வு காண விருப்பம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சந்தேக நபரால் பாதிக்கப்பட்ட ஏனைய நபர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பி
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் அணுகுமுறை மாறும்
நாடளாவிய ரீதியில் இன்று (20) செவ்வாய்க்கிழமை ஒரு மணித்த
தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத
ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொ
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்இ இந்தியப் பிரத
பரபல போதைப்பொருள் வியாபாரியான ஹைபிரிட் சுத்தா என்பவர
கொழும்பில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து குத
நாட்டில் நேற்றைய தினம் மேலும் 15 ஆயிரத்து 583 பேருக்கு கொ
நேற்று இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுக
பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்ட நுரைச்சோலை ம
வரி அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை உள்ளிட
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்
வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 288 இ
