பின்வத்தை வடுபாசல் தோட்டத்தில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமியின் முகத்தில் தந்தையொருவர் ரைஸ் குக்கரின் மூடியால் சூடு வைத்துள்ளதாக முறைப்பாடு பதிவாகி உள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தீக்காயங்களுடன் நேற்று (05) இரவு தனது தாயுடன் பொலிஸில் முறைப்பாடு செய்து விட்டு, பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு சிறுமி வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த போது, சந்தேக நபரான தந்தை இரவு 7.45 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, சிறுமியின் தாய் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
சந்தேகநபர் ரைஸ் குக்கரின் மூடியைத் திறந்து, “ஏன் இவ்வளவு சாதம் சமைக்கிறாய்?” எனக் கூறி ரைஸ் குக்கரின் மூடியை சிறுமியின் முகத்தில் வைத்துள்ளதாக சிறுமி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
முகம் மற்றும் கன்னங்களில் தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பின்வத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
பாடசாலை மாணவர்களில் மேலும் ஒரு மில்லியன் பேருக்கு பாட
கிழக்கு மாகாணத்தில் இந்திய முதலீட்டுக்கான வாய்ப்புக
ஏப்ரல் 2ஆம் திகதிக்குப் பிறகு மின்வெட்டு நடைமுறைப்படு
பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 7 வர்த்த
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச
கொவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவ மேற்பார்வைக் காலத்த
மைத்திரிபால சிறிசேன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்
நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டத
புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அத
இலங்கைக்கு முன்னைய அமர்வுகளில் வழங்கிய வாக்குறுதிகள
முள்ளியவளையில் நகர் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திய
நான்கு மாவட்டங்களில், காவல்துறை அதிகார பிரிவு ஒன்றும்
நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையில
வெசாக் தினத்தில் கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒரு
இலங்கை சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்த
