மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேரை நேற்றுஎஇரவு கைது செய்துள்ளாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஊறணியிலுள்ள கொத்துக்குளத்து மாரியம்மன் ஆலயத்தினுள் நேற்று இரவு 10 மணியளவில் நுழைந்த நாவற்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன், அங்கு கோபுர கட்டிட புனரமைப்பிற்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை திருடிக் கொண்டு இருந்தபோது பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இதேவேளை, சீலாமுனை பகுதியில் துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கூளாவடி பிரதேசத்தைச் சோந்த 60 வயதுடைய ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து திருடப்பட்ட 2 துவிச்சக்கர வண்டிகளை பொலிஸார் மீட்டனர்.
இதேவேளை புதூர் பிரதேசத்தில் கடந்த மாதம் 4ம் திகதி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் காரியாலயத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற 65 வயதுடைய மாமனாரை கோடாரியால் தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகி வந்த 44 வயதுடைய மருமகனை பொலிஸார் கைது செய்தனர்.
இந்த சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
எமது ஆட்சியாளர்கள் அவ்வப்போது இறைமை, தன்னாதிக்கம்,
இலங்கைக்கு இன்றையதினம் (29-05-2022) டீசல் அடங்கிய கப்பல் ஒன்ற
பத்தரமுல்ல பிரதேசத்தில் பெண்ணொருவர் பொலிஸாரால்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையில் காணப்படும் குறைப
நாடு பூராகவும் முழுமையான பயணத்தடை இன்று (14.05) முதல் அமுல
தற்போதைய எரிவாயு நெருக்கடி இன்னும் ஒரு வாரத்தில் முடி
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்க
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுப
இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன எ
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர
இலங்கையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தே
புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரப்படுவதா
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை இம்முறை எழுச்சியாக
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூர இந்த அரசு
