சந்தையில் தற்போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் மிகவும் குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதனால், உணவு பொருட்களை உரிய முறையில் பார்த்து கொள்வனவு செய்யுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 25ஆம் திகதி வரை, உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் உணவுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.
விசேடமாக பண்டிகை காலத்தில் உற்பத்தி செய்யப்படும் உணவுகள் மற்றும் அவற்றுக்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தொடர்பில் ஆராயப்படும்.
இதற்காக நாடளாவிய ரீதியில் சுமார் 3,200 அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதன்போது முறைகேடான சம்பவங்கள் இடம்பெற்றால் அவை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும்.
அதேநேரம் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஏதேனும் செயற்பாடுகள் இடம்பெற்றால், அவற்றை 011 263 5675 என்ற பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தொலைபேசி இலக்கத்துக்கு பொதுமக்கள் அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும்.”என தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்
ஒரு தனி நபரின் தேவைக்காக 22 வது அரசியலமைப்புத் திருத்தம
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மைய குழுவினால் வெள
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் மீண
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வ
சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் இன மத நல்லிணக்கத
குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பாக யுனிசெஃப் முன்னர
கடந்த 24 மணித்தியாலங்களில் 18 விமானங்களில் நடவடிக்கைகளி
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று (
பொரளையில் அமைந்துள்ள பிரபல மலர்ச்சாலையொன்றின் உரிமை
சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கையை பயன்படுத
நாளை (மார்ச் 15) ஆரம்பமாகவிருந்த தவணைப் பரீட்சைகளை பிற்
அமைச்சர் உதய கம்மன்பில நம்பிக்கையில்லா பிரேரணையை எதி
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் தமிழின படு
