கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்று (புதன்கிழமை) முதல் இந்தியா ஏற்றுமதி செய்யவுள்ளது.
இதன்படி நேபாளம், பங்களாதேஷ் , மியான்மர், பூட்டான், மாலைத்தீவுகள் மற்றும் செசலிஸ் ஆகியவற்றுக்கு கொவிட் தடுப்பு மருந்து அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதனை நேற்று பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் அனைத்து உலக மக்களுக்கும் இந்தியா தனது ஆதரவுக்கரம் நீட்டும் என்றும் அனைத்து நாடுகளுக்கும் தடுப்பு மருந்தை அனுப்பி வைக்க தயார் என்றும் தெரிவித்துள்ளது.
இலங்கை, ஆப்கானிஸ்தான், மொரீஷஸ் போன்ற சில நாடுகளின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் ஒப்புதல் கிடைத்ததும் தடுப்பு மருந்து அனுப்பி வைக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதை ஓராண்டு முதல்
தற்போது சமூகவலைத்தளங்களில் பள்ளியில் உள்ள கழிவறையை ஒ
தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை
இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அரு
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு போராடிவரும
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிஹார
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து உயிரிழந்
