மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று(புதன்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் மன்னார் வைத்தியசாலையைச் சேர்ந்த 2 தாதியர்களும், 2 ஊழியர்களும் அடங்குவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மாதிரிகள் பெறப்பட்ட 3 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொரோனா தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்தனர் என்ற அடிப்படையில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த 11 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னார் பொது வைத்தியசாலை மருத்துவ விடுதியில் கொரோனா நோயாளிகள் இருவர் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அந்த விடுதியில் பணியாற்றிய மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், நோயாளிகள் என சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறிப்பட்டது.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் அடிப்படையில் தாதிய உத்தியோகத்தர்கள் இருவரும் சுகாதார ஊழியர்கள் இருவரும் என நால்வர் சுயதனிமைப்படுத்தபட்டிருந்தனர்.
குறித்த நால்வருக்கும் கொரோனா தொற்று உள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம் முறை இலங்கை வி
கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமா
இலங்கை தொடர்பான ஐக்கிய இராச்சியத்தின் பயண ஆலோசனையில்
இலங்கைக்கு இன்றையதினம் (29-05-2022) டீசல் அடங்கிய கப்பல் ஒன்ற
சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்
சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னு
மியன்மார் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற ஆங் சான்
நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ம
யாழ் மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுத
நடைபெறவிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசே
பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சிய
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொருட்கள் ஏற்றுமதி மு
எத்தனோல் விலை உயர்வால் எதிர்வரும் நாட்களில் மதுபானத்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத் தடைகளை மீறிச் செயற்ப
