கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கட்டாயமாக தகனம் செய்ய வேண்டும் என்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
குறித்த செயற்பாடு நாட்டிலுள்ள முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினரின் நம்பிக்கைகளுக்கு முரணானது எனவும் அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட அல்லது தொற்று உறுதியானதாக சந்தேகிக்கப்படும் சடலங்களை கையாள்வதற்கான ஒரே வழியாக தகனம் செய்யப்படுவது மனித உரிமை மீறல் செயற்பாடுகளுக்கு சமமானதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் கொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதனால் தொற்று பரவுவதற்கான ஆதாரங்கள் எவையும் வெளிப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுபடுத்துவதற்கு பொதுவான சுகாதார நடைமுறைகளை கடுமையாக பின்பற்றுகின்ற போதிலும் கொரோனா காரணமாக மரணிப்பவர்களுக்கு கௌரவமளிக்க வேண்டும் எனவும் இலங்கையை அந்த சபை வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை, அவர்களின் மரபு, கலாசாரம் மற்றும் நம்பிக்கை என்பவற்றிற்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் நாளை செவ்வாய
கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெடிகந்த வீதி - இரத்ம
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக
திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்து
பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் வெளிந
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புகாவற்த
நாட்டின் பொருளாதாரத்த
அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜுலி சங், பிரித்தான
கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று வீடு வாடகைக்கு த
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிராதன வீதி புனானை பகுதிய
கொரோனா மருந்தை இலவசமாகவே வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச
அலாவுதீனின் அற்புத விளக்கு போன்றே பஸில் ராஜபக்சவின் ந
பாடசாலை மாணவி ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயரிழந
இலங்கையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தே
