தரம் 11 வகுப்புகள் மட்டுமே முதலில் இடம்பெறும்
மேல் மாகாணத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக மட்டும் இன்று முதல் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன.
எனினும், கல்விப்பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களை இலக்கு வைத்து மாத்திரம் இன்று முதல் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை திறக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி மேல் மாகாணத்திலுள்ள 11 கல்வி வலயங்களுக்கு உட்பட்ட ஆயிரத்து 576 பாடசாலைகளில் இன்று முதல் 907 பாடசாலை மாத்திரம் 11ம் தர மாணவர்களுக்காக திறக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மார்ச் மாதம் 01ம் திகதியிலிருந்து 11ம் திகதி வரை நடைபெறவுள்ள கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்காக மேல் மாகாணத்தில் 79,000 மாணவர்கள் தோற்றவுள்ளதாகவும் அவர்கள் தவறவிட்ட கற்றல் நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதற்காக இம் முடிவை எடுத்ததாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டிருக
அத்தியாவசியமான 383 மருந்துகளில் 92 மருந்துகளுக்கு தட்டு
எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை மு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி வ
உலகப் பொருளாதாரத்தில் எமது வர்த்தக பங்கை அதிகரிக்க உத
இலங்கையின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம்
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின
நாட்டில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கில
பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழ
இவ்வருடம் உள்நாட்டு பால் உற்பத்தி 70 % ஆக அதிகரிக்கப்பட
மன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜ
நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத
கொள்ளுபிட்டியில் அனுமதிப்பத்திரமின்றி நடத்தப்பட்டு
சட்டமா அதிபர் திணைக்களத்தில் புதிதாகத் திறந்து வைக்க
