கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி தீவக மக்கள், மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம்- வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஜே 11 மண்கும்பான், 5 ம் வட்டாரத்திலுள்ள தீவகத்தில், கடற்படைக்கான பிரதான முகாம் அமைந்துள்ளது.
அவை பொதுமக்களுக்கு சொந்தமான காணியாகும். எனவே குறித்த 15 ஏக்கர் காணியினை விடுவிக்குமாறு கோரி, இன்று (திங்கட்கிழமை) காணி உரிமையாளர்களினால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 30 வருட காலமாக தனியாருக்குச் சொந்தமான இந்த 15 ஏக்கர் காணியில் தீவகத்திற்கான கடற்படையின் பிரதான முகாம் அமைக்கப்பட்டு காணி கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த காணியினை சுவிகரிப்பதற்குரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், குறித்த 15 ஏக்கர் காணியின் உரிமையாளர்கள் தமது காணியினை பெற்றுத் தருமாறு கோரி, யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அ
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு சுதந்திர சதுக்கத்தி
வவுனியாவில் ச.ட்டவிரோத து.ப்பாக்கியுடன் நபரொருவர் விச
நாட்டில் விநியோகிக்கப்படும் திரிபோஷா தயாரிப்புகளில்
இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வகையில் மாவட்டங்க
மனித உரிமைகள் என்ற காரணத்தைக் காட்டி மேற்குலக நாடுகள்
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுப
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழீழ வி
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வீதியில் நடந்து சென்று
அரச இரகசியச் சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்களா
நீதிமன்ற உத்தரவினை மீறி மகிழடித்தீவில் நினைவுத்தூபி
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு
நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்குமாறு பல அமைச்சர்க
