கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி தீவக மக்கள், மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம்- வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஜே 11 மண்கும்பான், 5 ம் வட்டாரத்திலுள்ள தீவகத்தில், கடற்படைக்கான பிரதான முகாம் அமைந்துள்ளது.
அவை பொதுமக்களுக்கு சொந்தமான காணியாகும். எனவே குறித்த 15 ஏக்கர் காணியினை விடுவிக்குமாறு கோரி, இன்று (திங்கட்கிழமை) காணி உரிமையாளர்களினால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 30 வருட காலமாக தனியாருக்குச் சொந்தமான இந்த 15 ஏக்கர் காணியில் தீவகத்திற்கான கடற்படையின் பிரதான முகாம் அமைக்கப்பட்டு காணி கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த காணியினை சுவிகரிப்பதற்குரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், குறித்த 15 ஏக்கர் காணியின் உரிமையாளர்கள் தமது காணியினை பெற்றுத் தருமாறு கோரி, யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பண மோசடி
குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக
வவுனியா பல்கலைக்கழகமானது அடுத்து வரும் மூன்று வருட கா
யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11
பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரயி
மன்னாரில் இன்றைய தினம் காலை தியாகதீபம் திலீபனின் நினை
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிது
நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைசர் கொவிட்-19 தடுப்பூச
இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு தொகுதி அஸ்ட்ராசெனகா க
நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பி.சி.ஆர். பரிசோதனை அறிக
