கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள மும்பை விமானத்தின் புறப்படுகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பாக ருவிட்டரில் பதிவிட்டுள்ள ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம், மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு செல்லும் விமானம் தாமதமானது என்று பதிவிட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா கொவிட்- 19 தடுப்பூசிகள் இன்று (வியாழக்கிழமை) நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன.
இன்று முற்பகல் 11 மணியளவில், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை கொண்டுவரும் விமானம் நாட்டை வந்தடையவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள மும்பை விமானத்தின் புறப்படுகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு இந்திய அரசு, 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்- 19 தடுப்பூசிகளை நன்கொடையாக இலங்கைக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும
ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன
இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு மூன்று வெளிந
சைப்ரஸிடமிருந்து இலங்கை அரசாங்கம் எரிபொருள் கொள்வனவ
பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை ஒழுங்காக பின்பற்றா
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற
தங்களுடைய கோரிக்கையின்படியே வடகடலில் பேரூந்துகள் இற
ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளம
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக
கொழும்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பெண் ஒருவர் மாட
கொழும்பு துறைமுகத்தில் தற்போது அத்தியாவசிய பொருட்கள
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினை தொடர்ந்து மல
