இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 5 இலட்சம் தடுப்பூசிகள் (டொஸ்கள்) நாளை காலை 11.00 மணியளவில் எயார் இந்தியா விமானம் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என இந்திய விமான சேவையின் கட்டுநாயக்க விமான நிலைய முகாமையாளர் சாரநாத் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாளை முதல் கொவிட் தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பித்ததன் பின்னர், முதல் கட்டத்தில் 3 இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கக்கூடியதாக இருக்கும் என சுகாதார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அத்துடன் உலக சுகாதார அமைப்பினால் கிடைக்கவிருக்கும் தடுப்பூசி கிடைத்த பின்னர் நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானோருக்கு மிக விரைவில் தடுப்பூசி வழங்க முடியும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த் ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு மணித்தியாலத்தில் 15 தொடக்கம் 20 பேருக்கு தடுப்பூசியை வழங்க முடியும் என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஒத்திகையின் மூலம் இது கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்க
வவுனியா ஶ்ரீநகர் கிராமமக்கள் தமது நியாயமான கோரிக்கைக
இலங்கையில் உணவுப் பொதியொன்றின் விலை இன்று முதல் நடைம
நாட்டில் நேற்று மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளா
கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வழங்க
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான கொரோனா தொற
நேற்றுமுன் தினம் இரவு காரொன்றில் இளம் குடும்பஸ்தர்கள
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆ
வெல்லவாய எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ
கண்டி பகுதியில் ஒரு நாய்க்கு பிறந்த பச்சை நிறக்குட்டி
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை 1000 ர
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு வி
<
போராட்டக்காரர்களால் பேர வாவியில் தள்ளப்பட்ட, பிரதே
