More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • உருத்திரபுரம் சிவன் கோவில் பகுதியில் அகழ்வாராய்ச்சிக்கான மதிப்பீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில்!
உருத்திரபுரம் சிவன் கோவில் பகுதியில் அகழ்வாராய்ச்சிக்கான மதிப்பீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில்!
Jan 31
உருத்திரபுரம் சிவன் கோவில் பகுதியில் அகழ்வாராய்ச்சிக்கான மதிப்பீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில்!

உருத்திரபுரம் சிவன் கோவில் பகுதியில் அகழ்வாராய்ச்சிக்கான மதிப்பீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆலய சூழலும் நேற்றைய தினம் பார்வையிடப்பட்டது.



கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் கோவில் பகுதியில் தொல்லியல் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்வதற்கான செலவு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த மதிப்பீட்டுப் பணிகள் கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



நேரடியாக சிவன் கோவில் பகுதிக்குச் சென்று அகழ்வாராச்சிக்கான மதிப்பீடுகள் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையினை கருத்திற்கொண்டு அலுவலகத்தில் வைத்தே செலவு மதிப்பீடுகள்   மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



இதேவேளை நேற்றைய தினம் (30.01.2021) உருத்திபுரம் சிவன் கோவில் பகுதியை, பிக்கு ஒருவர் மற்றும் இராணுவத்தினர் சென்று பார்வையிட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.



நேற்றையதினம் சனிக்கிழமை உருத்திரபுரம் சிவன் கோவில் பகுதிக்கு பிக்கு ஒருவர் நண்பகல் வேளையில் வருகை தந்ததாகவும் பிக்கு சென்ற சில மணித்தியாலங்களின் பின்னர் அப்பகுதிக்கு காவற்துறையினர் வந்ததாகவும் பின்னர் மாலை வேளையில் இராணுவத்தினர் வருகை தந்து அவ்விடத்தை பார்த்துச் சென்றதாகவும் ஆலய பரிபாலன சபையின் தலைவர் பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.



இந்த நிலையில் குறித்த பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்காக புத்தசாசன அமைச்சினால் நிதி ஒதுக்கப்பட்டு ஜனவரி மாதம் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. 



குறித்த பிரதேசத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்ற போது அங்கு ஏதாவது பௌத்த வரலாற்று எச்சங்கள் காணப்படுமாயின்  அந்த இடத்தில் புதிய விகாரை ஒன்று அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.



வடக்கின் சில பிரதேசங்களில் தமிழ், பௌத்தம் இருந்தமைக்கான சான்றுகள் முன்னர் அடையாளம் காணப்பட்டிருந்தது. எனவே இங்கும் அவ்வாறு ஏதேனும் அடையாளம் காணப்படும் பட்சத்தில் அங்கு விகாரை அமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep20

இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடு

May16

நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை ந

Apr03

மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நான்கு ஊடகவியலாளர்கள், ஒரு

Feb21

இலங்கைக்கு தேவையான எரிபொருளை ஏற்றிய 5 கப்பல்கள் எதிர்

Jun19

ஐக்கிய நாடுகள் சபையின் 9-வது பொதுச்செயலாளராக போர்ச்சு

Oct25

தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவை வழிநடத

Apr02

மட்டக்களப்பு நகரில் பிச்சைக்கார வேடம் பூண்டு துவிச்ச

Oct08

பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் ந

Apr10

உயர்ந்த  கட்டிடங்களுக்கு  மாறாக    ரம்மியமான  ச

Feb03

ஹங்வெல்ல பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சற்று முன்

Mar27

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தின

Apr08

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று வீடு வாடகைக்கு த

Mar02

வவுனியாவில் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உற

Jun28

கடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி ந

Feb11

சுகாதாரப் பணிப்புறக்கணிப்பின் போது அங்கொட மனநல வைத்த

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 03 (07:40 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 03 (07:40 am )
Testing centres