வவுனியாவில் தொடர் செயின் அறுப்புச் சம்பவங்களில் ஈடுபட்ட மூவரை வவுனியா குற்றத்தடுப்பு காவற்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
கடந்த ஒருவார காலப்பகுதியில் வவுனியா வேப்பங்குளம், சாந்தசோலை, இறம்பைக்குளம் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு நபர்கள் வீதியால் செல்லும் பெண்கள் அணிந்திருந்த செயின்களை அறுத்துச்சென்றிருந்தனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா குற்றத்தடுப்பு காவற்துறையினரிடம் முறைப்பாடு அளித்திருந்தனர். குறித்த முறைப்பாடுகளிற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மதவாச்சி மற்றும் கொழும்பு பகுதியை சேர்ந்த மூன்று நபர்களை கைது செய்திருந்ததுடன், அவர்களிடம் இருந்து 9 பவுண் தங்க நகைகள் மற்றும் கைக்குண்டு, வாகன இலக்கத்தகடுகள், மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை வவுனியா தலைமை காவல்நிலைய பொறுப்பதிகாரி மானவடுவின் தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவற்துறை பரிசோதகர் அழகியவண்ணவின் வழிகாட்டலில் சாயன்களான திசாநாயக்க, விக்கிரமசூரிய, குமணசேகர, சதுரங்க, கான்ஸ்டபிள்களான தயாளன், ரணசிங்க, தம்மிக, சமீர, மொறவக்க, அமரசூரிய ஆகியோர்களை கொண்ட காவற்துறை குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


வன இலாகாக்குரிய காணியாக இருந்தாலும் அக் காணிககளை அமைச
1,000 ரூபாய் சம்பளத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத அவல நி
உயர்ந்த கட்டிடங்களுக்கு மாறாக ரம்மியமான ச
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்ட
குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்கி குழந்தைகளின் எதிர்
புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) உறுப்பினர் சஜின் வா
நேற்றைய தினத்தில் (06) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இன்று (27) பிற்பகல் மலசலகூட க
அடுத்த சிறுபோக பயிர் செய்கையின் போது விவசாயிகளுக்கு உ
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் கிராமத்தில் அமை
அரசியலில் பிரவேசிக்கும் திட்டம் இல்லை என இலங்கை கிரிக
காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் காலி முகத
கொரோனா தொற்றாளர்களாக மேலும் 348 பேர் சற்று முன்னர் அடைய
புதிய திட்டத்தின் கீழ் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர
