இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியானது, சுயசார்பு இந்தியாவின் சின்னம் மட்டுமல்லாது அதன் சுய பெருமையின் அடையாளம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் குறிப்பிடுகையில், “இந்தச் சங்கடம் நிறைந்த வேளையில், இந்தியாவால் எப்படி உலகிற்கு சேவையாற்ற முடிகிறது என்றால், நம் நாடு இன்று மருந்துகள் மற்றும் தடுப்பூசி தயாரிப்பில் வல்லமை பெற்றிருக்கிறது என்பதுடன் சுயசார்பு அடைந்திருக்கிறது என்பதால்தான்.
பல்வேறு நாடுகளின் குடியரசுத் தலைவர்களும் பிரதமர்களும் இந்தியா குறித்து வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வருகின்றனர்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியானது, சுயசார்பு இந்தியாவின் சின்னம் மட்டுமல்லாது, அதன் சுய பெருமையின் அடையாளமாகும்.
நாம் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை மேற்கொள்வது மட்டுமல்லாமல், நமது குடிமக்களுக்கு தடுப்பூசி போடுவதில் மிக வேகமாக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தொற்றால்
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் கடந
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதி
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு
குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவர
சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்ப
ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இந்த
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இந்திய பல்கலைக்கழக ச
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான 
பேரறிவாளனுக்கு பிணை வழங்கியதற்கு நாம் தமிழர் கட்சியி
கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள்
சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன் பகுதியில் தமிழர
தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இனிய
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி ஜப்பான்
