2 ஆம் உலகப் போரில் பங்கேற்ற பிரித்தானிய இராணுவத்தில் பணிபுரிந்த கெப்டன் டொம் மூர் (Tom Moore), உடல்நலக் குறைவால் தனது 100 ஆவது வயதில் நேற்றுக் காலமானார்.
இவர் கொரோனா பேரிடர் காலத்தில் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக தனது தோட்டத்தில் ஊன்றுகோலின் உதவியோடு 100 சுற்றுகள் நடந்து அதனை வீடியோவாக வெளியிட்டு 53 மில்லியன் டொலர்கள் நன்கொடையாக திரட்டி சாதனை படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் கடந்த 5 வருடங்களாக புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த டொம் மூர், கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து உடல்நிலை மேலும் மோசமாகிய நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் அவரது குடும்பத்திற்கு பிரித்தானியாவின் ராணி எலிசபெத், பிரதமர் போரிஸ் ஜோன்சன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது இரங்கல் செய்தியில், டொம் மூர் ஒரு ஹீரோ. உலகத்திற்கே நம்பிக்கையின் சின்னமாக விளங்கியவர் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இரா
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மூன்று தங்கப் பதக்கம் வ
அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய நீண்ட தூர மூலோபாய
உக்ரைன் அகதிகள் குறித்து நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்
அமெரிக்காவில் சமீப காலமாக பொது இடங்களில் துப்பாக்க
பிரிட்டனில்
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச தொழில் அதிபர்
ரஷ்ய வீரர்களால் சுடப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட உக கொவிட் தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலா கொலம்பியாவின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கன ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் இருக்கும் இராண இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்றிரவு இ இந்திய விமானப்படையை பலப்படுத்துவதற்காக, பிரான்ஸ் நாட பெண்களுக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டுமென தாலிபான்க
