வவுனியாவில் இதுவரை 362 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஒருவர் இறப்பைச் சந்தித்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வட மாகாணத்தில் ஜனவரி மாதத்தில் 557 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடையவர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் 330 பேர் வவுனியா மாவட்டத்திலிருந்தும் 159 பேர் மன்னார் மாவட்டத்திலிருந்தும், 46 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத் திலிருந்தும் 14 பேர் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தும், 8 பேர் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்தும் அடையாளம் காணப்பட்டுள் ளனர்.
கொரோனா தொற்று ஏற்பட்ட ஆரம்ப காலத்திலிருந்து வட மாகாணத்தில் இதுவரை 805 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் அதிகபட்சமாக 362 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 221 பேரும், மன்னார் மாவட்டத்தில் 176 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 34 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று ஆரம்பமான காலம் முதல் இன்று வரை வட மாகாணத்திலே கொரோனா நோயால் மூன்று இறப்புகள் ஏற்பட் டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் இரு இறப்புகளும் வவுனியா மாவட்டத்தில் ஓர் இறப்பும் ஏற்பட்டுள்ளன.
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட
கடந்த சில நாட்களில், 87,000 குடும்பங்கள் கட்டணம் செலுத்தா
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனான யோசித்த ராஜபக்சவின்
பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பத
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்
நாட்டில் அந்நிய செலாவணி குறைவடைதல், டொலர்களுக்கான தட
ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் நோயாளர்கள் மீது மின் விச
இலங்கை சுதந்திர தினத்தைக் கொண்டாடிய சந்தர்ப்பத்தில்
எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை மு
வவுனியா மாகாண பொது வைத்தியசாலையினை போதனா வைத்தியசாலை
வட மாகாணத்தில் மாவட்டங்களுக்கு இடையே கால்நடைகளை கொண்
இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு தொகுதி அஸ்ட்ராசெனகா க
புதிய அரசமைப்பு ஒன்றின் நகலைத் தயாரிப்பதற்காக கோட்டா
வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் உள்ள வீடொன்றின்
ஹட்டனில் உள்ள ஆடவர் பாடசாலை ஒன்றில் 11 பேருக்கு கொரோனா
