அக்கரைப்பற்றில் பிறந்து கல்முனையை வதிவிடமாகவும் கொண்ட சிரேஷ்ட சட்டத்தரணி தாஹா செய்னுதீன் நேற்று (05) மாலை கொழும்பில் காலமானார்.
இவரது ஜனாஸா நல்லடக்கம் நேற்று (05) கொழும்பு 07 ஜாவத்தை மையவாடியில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்றில் 1940ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04ஆம் திகதி பிறந்த அவர். அக்கரைப்பற்று மெதடிஸ்ட் மிசன் மற்றும் ரோமன் கத்தோலிக்க கல்லூரி, மட்டக்களப்பு மெதடிஸ்ட் மத்திய கல்லுாரி ஆகியவற்றில் தனது ஆரம்பக் கல்வியை தொடர்ந்தார்.
1959ஆம் ஆண்டு இலங்கை சட்டக் கல்லுாரியில் நுழைந்த அவர், 1965இல் உயர் நீதிமன்ற சட்டத்தரணியானார். 1974இல் பதில் நீதிபதியானார். 1975ஆம் ஆண்டு முதல் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில், கிழக்கு மாகாண குடியியல் வழக்குகளில் ஆஜராகி வந்தார்.
1984/85 காலப் பகுதியில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக தெரிவான இவருக்கு, அவரது சேவையை பாராட்டி கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தினால் 2015இல் கௌரவிக்கப்பட்டார்.
சுமார் 56 வருட காலம் கிழக்கின் அனைத்து நீதிமன்றுகளிலும், குடியியல் வழக்குகளில் ஆஜராகியிருந்தார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவருக்கு மூன்று சகோதர, சகோதரிகள் உள்ளனர். இவரின் சகோதர்களில் ஒருவர் அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலய முன்னாள் அதிபர் ஹாறூன் என்பதோடு, மர்ஹூம் இக்பால் ஆசிரியர், மர்ஹூம் றக்கீபா ஆசிரியை ஆகியோர் இவரது ஏனைய சகோதர சகோதிகளாவர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் Online ஊடா
11.6 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக கட்டப்பட்ட வட்டுக்
போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனத் தரிப்பிட பிரச்சி
கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்கள
மட்டக்களப்பு கரடியனாறு காவற்துறை பிரிவிலுள்ள மரப்பா
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப
ஜனாதிபதி கோட்டாபயவின் மகன் மனோஜ் ராஜபக்ச தனது தந்தையை
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று இரண
இலங்கையில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த யானை ஒன்று தனது 69
புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் விவகார
இன்றைய தினம் சுகாதாரபிரிவினர் வேலைநிறுத்தப்போராட்டத
இலங்கையில் இதுவரை 16 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட
அரசாங்கம் தனது தவறுகளை ஏற்றுக்கொண்;டு, நாடு எதிர்நோக்
நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சா
நாடளாவிய ரீதியில் பொது முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்
