கைகளுக்கும் முகத்திற்கும் இரட்டை மாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட 22 வயது அமெரிக்க ஆடவர் மறுவாழ்வு பெற்றுள்ளார்.
டிமியோ என்ற அந்த ஆடவர் மேற்கொண்ட மாற்று அறுவைச் சிகிச்சை, உலகில் முதல்முறையாக வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட அவர், முகத்திற்கும் கைகளுக்கும் தம்மை இன்னும் பழக்கப்படுத்திக்கொண்டு வருகிறார்.
2018ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் டிமியோ, வேலை முடிந்து வீட்டிற்குக் காரில் சென்றுகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானார். விபத்தில் கார் வெடித்ததால் அவருடைய உடலின் 80 வீதம் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தது.
டிமியோவின் முகம் உருத்தெரியாமல் போனது. அவர் தம்முடைய விரல்களையும் இழக்க நேரிட்டது.
20 அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்ட பின்னர், அவர் கடந்த மார்ச் மாதத்தில் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள எண்ணினார்.
ஓகஸ்ட் மாதத்தில் 140க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் டிமியோவின் கைகளுக்கும் முகத்திற்கும் இரட்டை மாற்று அறுவைச் சிகிச்சையை நடத்தினர். அறுவைச் சிகிச்சை கிட்டத்தட்ட 24 மணிநேரம் நீடித்தது.
மறுவாழ்வு பெற்றுள்ள டிமியோவால் சூடு, குளிர் போன்ற உணர்வுகளை மீண்டும் கண்டறிய முடிகிறது.
இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட்
ஜப்பானில் டோக்கியோவின் வடகிழக்க
கார்கிவை பாதுகாக்கும் உக்ரேனிய துருப்புக்கள் ரஷ்யா எ
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்ப
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலிபான் பயங்
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள த
உக்ரைனிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் மீண்டும் சமாதான
நாட்டில் கசீனோ வரி 500 மில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ள
இந்தோனேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றின
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஹியாலியா என்ற இடத்தி
யுக்ரெய்னை ஆக்கிரமிப்பதற்கு ரஸ்யா தயாராகி வருகின்ற ந
பூமி கிரகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் ச
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் ஹர்னாய் மாவட்ட
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேஸ
