கைகளுக்கும் முகத்திற்கும் இரட்டை மாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட 22 வயது அமெரிக்க ஆடவர் மறுவாழ்வு பெற்றுள்ளார்.
டிமியோ என்ற அந்த ஆடவர் மேற்கொண்ட மாற்று அறுவைச் சிகிச்சை, உலகில் முதல்முறையாக வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட அவர், முகத்திற்கும் கைகளுக்கும் தம்மை இன்னும் பழக்கப்படுத்திக்கொண்டு வருகிறார்.
2018ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் டிமியோ, வேலை முடிந்து வீட்டிற்குக் காரில் சென்றுகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானார். விபத்தில் கார் வெடித்ததால் அவருடைய உடலின் 80 வீதம் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தது.
டிமியோவின் முகம் உருத்தெரியாமல் போனது. அவர் தம்முடைய விரல்களையும் இழக்க நேரிட்டது.
20 அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்ட பின்னர், அவர் கடந்த மார்ச் மாதத்தில் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள எண்ணினார்.
ஓகஸ்ட் மாதத்தில் 140க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் டிமியோவின் கைகளுக்கும் முகத்திற்கும் இரட்டை மாற்று அறுவைச் சிகிச்சையை நடத்தினர். அறுவைச் சிகிச்சை கிட்டத்தட்ட 24 மணிநேரம் நீடித்தது.
மறுவாழ்வு பெற்றுள்ள டிமியோவால் சூடு, குளிர் போன்ற உணர்வுகளை மீண்டும் கண்டறிய முடிகிறது.
உக்ரைனுக்கு எதி
உக்ரைன் எல்லையில் உச்சகட்ட போர் பதற்றம் அதிகரித்துள்
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக,
சீனாவில் ஆண்டுதோறும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால
காசா நகர் மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத
மெக்சிகோ நாட்டின் மேற்கு மாநிலமான மைக்கோவாகனில் நடைப
உக்ரைன் மீதான போரை ரஷ்யா விரைவாக முடிவுக்கு கொண்டுவர
முதன் முறையாக ஜெர்மனியில் டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்
ஐ. நா சபையின் ஜெனிவா மனித உரிமைச் சபை அமர்வு ஆரம்பமாகிய
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார்.
மியான்மரில் இன்று காலை 5.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட
2021ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பயோஎன்டெக் மேலும் 75
உக்ரேனியர்கள் காட்டுமிராண்டித்தனம், அரக்கத்தனம் மற்
ஈராக்கில், மூக்கில் இருந்து ரத்தம் கசியும் புதிய காய்
பொதுமக்கள், மாணவர்கள் வெளியேறும் வகையில் நான்கு நகரங்
