அமெரிக்காவின் எதிரி நாடுகளான ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளின் கூட்டு போர் பயிற்சியினால், அமெரிக்காவுக்கு பிரச்சினை இல்லை என்பதனை அமெரிக்கா மறைமுகமாக கூறியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் ஜோன் கிர்பி கூறுகையில், ‘கடற்படைகளின் திறன்களை பயன்படுத்தும் பயிற்சி எதிர்பார்க்கப்பட வேண்டிய ஒன்று. இது போன்ற பயிற்சிகள், கடல்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும், உலகெங்கும் உள்ள எங்கள் கூட்டணிகள் மற்றும் கூட்டாண்மைகளை ஆதரிப்பதற்கும், நம்முடைய திறனுக்கு ஒரு தடையாக இருக்கும் என்று கருதவில்லை’ என கூறினார்.
ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா ஆகிய நாடுகள், இந்த மாத நடுப்பகுதியில் இந்திய பெருங்கடல் பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட போவதாக ஈரானுக்கான ரஷ்ய தூதர் லெவன் தாகரியன் அண்மையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக குறித்த மூன்று நாடுகளும் 2019ஆம் ஆண்டு டிசம்பரில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டன. தற்போது இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளன.
லெபனான் நாடு கடந்த ஓராண்டுக்கும் மேலாக மிக மோசமான பொர
தொலைபேசி உரையாடலின் போது ரஷிய அதிபர் புதினை, அமெரிக்க
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 6 ஆவது நாளாக ந
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தபடியே இ
அதிக வருமானம் ஈட்டுபவர்கள் அதிக லாபம் ஈட்டினாலும் பொர
அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான
கடந்த ஆண்டில் 70 ஏவுகணை சோதனைகள் நடத்திய வடகொரியா 2023ம
சீனாவில் அண்மை காலமாக கத்திக்குத்து தாக்குதல் சம்பவங
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். கடந
உக்ரைனுடனான போரில் தங்கள் படையினர் கொல்லப்பட்ட எண்ணி
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச
உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 45 நாளாகிறது. பல்வேறு ந
