மெல்போர்னில் நாளை (திங்கட்கிழமை) ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி இடம்பெறவுள்ள நிலையில் இன்று மூன்றாவது நாளாக அவுஸ்ரேலியாவில் கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று நெறிமுறை காரணமாக, அவுஸ்ரேலிய ஓபன் டெனிஸ் போட்டியை பார்வையிட 30,000 ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் இது வழக்கத்தை விட 50% குறைவு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா தொற்றினை எதிர்த்துப் போராடுவதில் வெற்றிகண்ட நாடுகளில் ஒன்றான அவுஸ்ரேலியாவில், ஜனவரி மாதம் மெல்போர்னை வந்தடைந்த வீரர்கள் இரண்டு வாரம் ஹோட்டல்களில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவருடன் தொடர்புடையவர்களுக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட தொழிலாளியுடன் கிட்டத்தட்ட 1,200 நெருங்கிய தொடர்புகள் இருந்ததாகவும் அவர்களில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் மெல்போர்ன் தலைநகரான விக்டோரியா மாநிலத்தில் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த வாரங்களில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு அவுஸ்ரேலியாவில் புதிய உள்ளூர் கொரோனா தொற்று நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிலையமொன்ற
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர
இந்தியாவின் பலத்தை பார்க்கும் பாகிஸ்தான் தனது அணு ஆயு
சவுதி அரேபியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெள
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருப்பவர் இந்திய வம்ச
இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு நிரந்தமா
ரஷ்யாவின் ஊடக ஒழுங்குமுறை நிறுவனம் அந்நாட்டில் பேஸ்ப
ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக உருவெடுத்துள்ள
ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி ரிக்டர் அளவ
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் மூன்று இடங்களில்
பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்காள மாநில முதல் மந்தி
உக்ரைன் மீதான ரஷ்ய போர் 106 நாட்களை கடந்துள்ளது. எனினும்,
பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து
அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், ககெனக்டிகட் மா
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்ற
