அம்பாறை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து காவல்த்துறையினரின் திடீர் சோதனை நடவடிக்கை கொரோனா அனர்த்தங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், நேற்றும் இன்றும் காலை முதல் மதியம் வரை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது சம்மாந்துறை புறநகரப்பகுதி, கல்முனை நகரப்பகுதி, நற்பிட்டிமுனை பிரதான சந்தி ,தாளவட்டுவான் சந்தி, பாண்டிருப்பு, சவளக்கடை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்திடீர் சோதனையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் காவல்த்துறையினரினால் வழங்கப்பட்டன.
இச்சோதனை நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட சிரேஸ்ட காவல்த்துறை அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்க வழிகாட்டலில் இடம்பெற்றதுடன் இதன் போது அம்பாறை மாவட்ட விசேட போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து கல்முனை ,சம்மாந்துறை, சவளைக்கடை , காவல் நிலைய போக்குவரத்து காவல்த்துறையினரும் இணைந்து முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இச்சோதனை நடவடிக்கையின் போது 117 பேருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்து
திருகோணமலை – குச்சவெளி – மதுரங்குடா பகுதியில் ஆண் ஒ
காரைதீவுக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆ
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் பகுதிகள் உடன் அ
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நா
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ப
தனது மனைவியைத் தாக்கிய இராணுவ மேஜர் ஒருவர் இன்று (16) ப
முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாம
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்த
இரண்டு புற்றுநோயாளிகளை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக
கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்ளைப் பின்பற்றி எதிர்வரு
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப் பட்ட 1,
வவுனியா தலைமை காவல்துறை நிலையத்தின் போக்குவரத்து பொற
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்கள
கொலை செய்து சடலத்தைக் கூரையில் தொங்க விடுவதாக மிரட்டல
