பிளஸ் 2 தேர்வு தொடங்கும் மே 3ஆம் தேதிக்குள் தமிழக சட்ட்டப்பேரவை தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்!
மே 3ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , மே 2 க்குள் பேரவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மே 3ஆம் தேதி முதல் மே 21-ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடப்பதால் அதற்கு முன்னதாகவே வாக்கு எண்ணிக்கையும் நடந்து முடிந்துவிடும் என்று தெரிகிறது.
தமிழக தேர்தலை ஒரே கட்டமாக ஏப்ரல் இறுதி வாரத்தில் நடத்த வேண்டும் என்று அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் கோரிக்கை வைத்தனர். அத்துடன் பள்ளிகள் தான் பெரும்பாலும் வாக்குச்சாவடிகள் ஆக இருக்கும் என்பதால் அதற்கு முன்னதாகவே தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவித்ததில் எந்த குழப்பமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் ஏப்ரல் இறுதி வாரத்தில் தமிழகத்தில் சட்ட்டப்பேரவை தேர்தல் நடக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை நடி
உத்தரகாண்ட் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாண
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ
இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா தலங்களில் மாஸ்க் அணியா
கேரளாவில் கம்யூனிஸ்டு கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இடைய
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம்கள் எழுச்
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கை
தேர்தல்களில் கள்ள ஓட்டுகள் பதிவாவதற்கு முக்கிய காரணங
