2007-ம் ஆண்டில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெற்றது. இந்த நிதியை பெற மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சி.பி.ஐ. கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதைத்தொடர்ந்து, கருப்பு பண மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இதனிடையே 2 கோடி ரூபாயை பதிவாளர் அலுவலகத்தில் செலுத்திவிட்டு கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட்டு கடந்த 22-ந்தேதி அனுமதி அளித்தது.
இந்த நிலையில் வெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி ரோஸ் அவென்யூ சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி எம்.கே. நாக்பால் விசாரித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி எம்.கே. நாக்பால், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரும் மனுவை ஏற்று அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செ
இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் போது சிறையில் இருந்து,
சத்தீஸ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டையில தேசிய கல்விக்கொள்கையில் 2019-ம் ஆண்டு பல்வேறு திருத்தங் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி காங் தமிகழத்தில் இறந்து போன தம்பியின் ஆசையை நிறைவேற்ற, ஐந் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்வ மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மகாராஷ்டிரா நவநிர் கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோ மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட சென்னை மெரினா கடற்கரை சாலை நேற்று காலை வழக்கம்போல் பர உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் முஸ்லிம் ராஷ்ட்ர இந்தியாவுக்கான புதிய பாராளுமன்ற கட்டிடம் டெல்லியில் தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி கொரோனா தடுப்ப
