More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கை மீது மேற்குலக நாடுகளின் தலையீடுகளை அனுமதிக்க முடியாது – சீனா திட்டவட்டம்
இலங்கை மீது மேற்குலக நாடுகளின் தலையீடுகளை அனுமதிக்க முடியாது – சீனா திட்டவட்டம்
Feb 27
இலங்கை மீது மேற்குலக நாடுகளின் தலையீடுகளை அனுமதிக்க முடியாது – சீனா திட்டவட்டம்

மனித உரிமைகள் என்ற காரணத்தைக் காட்டி மேற்குலக நாடுகள் சில இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது என சீன வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீ தெரிவித்துள்ளார்.



இந்தச் செயற்பாடுகளை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், இந்த விடயத்தில் இலங்கையின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாப்பதற்காக பூரண ஒத்துழைப்பை சீனா வழங்கும் என்றும் வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீ கூறியுள்ளார்.



இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்று சீன வெளிவிவகார அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சீனாவும் இலங்கையும் நீண்ட கால நட்பின் கூட்டுறவு பங்காளிகள் என்றும், இந்த நட்பைத் தொடர்ந்தும் பேண வேண்டும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.



இதேவேளை, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு, மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சவால்களை சமாளிப்பதற்கும் சீனா தனது தன்னலமற்ற உதவிகளை வழங்கி வருகின்றது எனப் பதிலளித்து குறிப்பிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர், சீனாவின் இந்த ஒத்துழைப்புக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளார்.



அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகள் மனித உரிமைகள் பிரச்சினைகளை எந்தவொரு உறுதியான ஆதாரமும் இல்லாமல், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை உள்ளிட்ட வளரும் நாடுகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து நெருக்கடிக்குள் தள்ளுகின்றன எனவும், இந்த விடயத்தில் சீனா தொடர்ந்து நீதியை நிலைநிறுத்தி வளரும் நாடுகளுடன் நிற்கும் என்று தாம் நம்புவதாகவும் தினேஷ் குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep19

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 ப

Feb02

இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெ

Mar08

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (08) 24 கரட் தங்கப

Mar12

அனுராதபுரத்தில் அழகப்பெருமாகம பகுதியில், பிறந்த ஒன்ற

Sep24

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள  சாம்பல்தீவு, நாயாறு, ந

Aug16

கொவிட் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்படாவிட்டால் நாட

Jan21

மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள

Feb23

நாடு முழுவதும் 7 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ளுமாறு

Sep22

உடன் அமுலுக்கு வரும் வகையில் இனிப்பு வகைகளின் விலையை 10

Jun28

கடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி ந

Jan27

புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி

Jan13

மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் காணாமல் போன 15 வயதுடைய சிறு

Jan27

யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்கு வந்த நோயாள

Oct05

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  (PUCSL)  இன்று 2 மணி

May02

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (00:42 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (00:42 am )
Testing centres