நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ளது. இந்த நிலையில் ஜான்கேபே மாகாணத்தில் உள்ள அரசு பள்ளிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் புகுந்தனர்.
அப்போது பள்ளி அருகில் இருந்த ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகளின் ஒரு பிரிவினர் தாக்குதல் நடத்தினார்கள். பின்னர் பள்ளியில் இருந்த 317 மாணவிகளை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.
பள்ளிக்குள் பயங்கரவாதிகள் பல மணி நேரம் இருப்பதற்காக வெளியில் இருந்த பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியபடி இருந்தனர். இதனால் மாணவிகளை கடத்தி செல்வதை தடுக்க முடியவில்லை.
இச்சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் இல்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட 42 பேர் கடத்தப்பட்டனர். அவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014-ம் ஆண்டு 276 பள்ளி மாணவிகளை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். அவர்களில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மதிப்பிலான சரக்குகளுடன் மலேசியா வழியாக நெதர்லாந்து ந
உக்ரைனில் சிக்கிய பாகிஸ்தான் மாணவர்கள் இந்தியக் கொடி
தென் அமெரிக்க நாடான ஈக்குவாடோரின் – குயாக்வில் நகரி
ரஷ்ய கான்வாய்யை உக்ரைன் படைகள் தாக்கி அழித்த வீடியோ
உலகிலேயே ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் அண்டை நாடான பாகிஸ
உக்ரைன் மீது ரஷியா 45-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. த
ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்ப
அனுமதி இன்றி மலேசியாவின் கடலில் அத்துமீறி நுழைந்த குற
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உக்ரைன் - மரியுபோலில் ஏறக்குறைய 2,000 அசோவ்ஸ்டல் பாதுகாவல
