உலகம் : செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் முதல் முறையாக 6.5 மீட்டர் நகர்ந்து சென்ற புகைப்படங்களை நாசா வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த மாதம் 18ம் தேதி பெர்சவரன்ஸ் ரோவரை செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறக்கி வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்தது. ரோவரின் ரோபோ கரங்கள், அறிவியல் உபகரணங்கள் சரியான முறையில் இயங்குகிறதா என ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் முக்கிய கட்டமாக ஆறு சக்கரங்களைக் கொண்ட ரோவர் முதல் முறையாக செவ்வாயில் நகர்ந்து செல்வதற்கான முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதில், ரோவர் தனது சக்கரங்களுடன் 6.5 மீட்டர் தூரம் நகர்ந்து சென்றுள்ளது. 4 மீட்டர் முன்னோக்கியும் பின் 150 டிகிரி திரும்பி 2.5 மீட்டர் பின்நோக்கியும் வந்து புதிய இடத்தில் நின்றுள்ளது. அதன் காலடி தடப் புகைப்படங்களை நாசா நேற்று தனது டிவிட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. செவ்வாயின் கரடு முரடான நிலப்பரப்பில் ரோவர் வெற்றிகரமாக நகர்ந்த செயல், இத்திட்டத்தின் மிகப்பெரிய மைல்கல் என நாசா விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். இந்த ரோவர் ஒரு நாளைக்கு சராசரியாக 200 மீட்டர் ஓடும் திறன் கொண்டது. செவ்வாய் கிரகத்தில் பாறை மாதிரிகளை துளையிட்டு சேகரித்து அதனை பூமிக்கும் கொண்டு வரும் பணியினை ரோவர் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய நாடான தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று த
சிங்கப்பூரில் 1970-ம் ஆண்டுக்கு பிறகு அந்த நாட்டின் மக்க
சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி,
ஆப்கானிஸ்தான் என்பது எந்நேரமும் ரத்த ஆறு ஓடிக்கொண்டி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 150க்கும் மேற்பட்ட இந்த
கம்போடியாவில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க 7 வயதான ஆப
கடந்த செவ்வாய் கிழமை வரை அமெரிக்காவில் தங்கியிருக்கு
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா தொடர்ந்து பல்வே
அஸ்ட்ராஜெனேகா கொரோனா தடுப்பூசி மேற்கத்திய நாடுகளில்
உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிவரும் ஆயுதங்கள
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் விண்கலம் வெற்றிக்கரமாக ச
ஜி7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு, பிரிட்டனின் கார்ன
விண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எ
ரஷ்யாவுக்கு எதிராக போரிடஇ உக்ரைனுக்கு 600 மில்லியன் டொல
உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் செம்மொழியான தமிழ்
