சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் தேர்தலில் பணியாற்றும் வாக்குச்சவாடி அலுவலர்களை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி, நேற்று முன்தினம் நடந்தது. நீலகிரி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான இன்னசென்ட் திவ்யா தொங்கி கிவைத்து, ஒதுக்கீடு பணியை பார்வையிட்டார.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 868 வாக்குச் சாவடிகளுக்கும் 3 ஆயிரத்து 472 அலுவலர்களும், கூடுதலாக 696 அலுவலர்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 168 பேர் பணியில் ஈடுபட உள்ளதாக கூறினார். இதற்காக அலுவலர்களை சுழற்சி முறையில், மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்று முடிந்ததாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து, நாளை 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு, 3 மையங்களில் தேர்தல் பணிகள் தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாகவும் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசாருதீன், தனி வட்டாட்சியர் புஷ்பா தேவி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தியாவின் ஜார்க்கண்ட மாநிலத்தில் ஐந்தாண்டுகளுக்
சேலத்துக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் நே
தினக்கூலி வேலை பார்க்கும் கேரளாவைச் சேர்ந்த 60 வயது முத
தமிழக சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு போராடிவரும
சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில
கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு 2020
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேருக்கு கொரோனா வ
கொரோனா தொற்று நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை ந
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 20 சீட்டுகளை
