இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் வேகமெடுத்துக் கொண்டிருக்கிறது. தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக பதிவாவதாக எச்சரிக்கை விடுத்திருக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. அதன் படி, அந்தந்த மாநில அரசுகள் மீண்டும் கிடுக்குப்பிடி நடவடிக்கைகளை கையெலெடுத்துள்ளன. ஒரு சில மாநிலங்கள் ஊரடங்கையும் அமல்படுத்திக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23,285 பேருக்கு கொரோனா பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 117 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 15,157 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி இருப்பதாகவும் 1,97,237 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 1,13,08,846 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து இதுவரை 1,09,53,303 பேர் குணமடைந்துள்ளதாகவும் 1,58,306 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் ஒக்ட
கோவை சுகுணாபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில
அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் உள்ள மகாத்மா காந்திய
புதுச்சேரியில் தினசரி கொரோனா பரவல் 100-க்கு கீழ் குறை
ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2022-23ம் கல்வ
உடுமலை அருகே கொல்லப்பட்ட ஆண் யானையின் தந்தத்தை நேற்று
கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை
டெல்லியில் தடையை மீறி மக்கள் பட்டாசு வெடித்த நிலையில்
சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி ச
இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவு கொரோனா த
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு நேற்று அற
