More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • காங்கிரசில் இருந்து துரோகிகள் ஒழிந்தது நல்லது - மம்தா பானர்ஜி
காங்கிரசில் இருந்து துரோகிகள் ஒழிந்தது நல்லது - மம்தா பானர்ஜி
Mar 20
காங்கிரசில் இருந்து துரோகிகள் ஒழிந்தது நல்லது - மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில் வருகிற 27-ந்தேதி முதல் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தது. குறிப்பாக கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், சுவேந்து அதிகாரி, ரஜிப் பானர்ஜி போன்ற முக்கிய மந்திரிகள் என ஏராளமான தலைவர்கள் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் ஐக்கியமாகினர். அவர்களில் பலர் பா.ஜனதாவில் தற்போது போட்டியிட சீட்டும் பெற்றிருக்கிறார்கள்.



இவ்வாறு நந்திகிராம் தொகுதியில் பா.ஜனதா சார்பில் களமிறங்கி இருக்கும் சுவேந்து அதிகாரியை எதிர்த்து முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜி, பர்மா மேதினிபூரில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது தனது கட்சியில் இருந்து விலகியவர்களை துரோகிகள் என அவர் வர்ணித்தார்.



இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-



திரிணாமுல் காங்கிரசில் இருந்து துரோகிகள் ஒழிந்தது நல்லது. இந்த துரோகிகள் தற்போது பா.ஜனதாவின் வேட்பாளர்களாகி இருக்கிறார்கள். இது அந்த கட்சியிலேயே காலம் காலமாக உழைத்து வரும் விசுவாசிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அவர்கள் எல்லாம் தற்போது வீட்டில் இருந்தே அழுது புலம்புகிறார்கள்.



கடந்த காலங்களில் நான் கடுமையான காயங்களுக்கு ஆளாகி இருக்கிறேன். எனது தலை, முதுகு மற்றும் உடலின் பிற பகுதிகள் அனைத்திலும் காயம் ஏற்பட்டு இருக்கின்றன. எனது கால்கள் மட்டும் தப்பியிருந்தன. ஆனால் தற்போது அவர்கள் என் காலை குறிவைத்திருக்கிறார்கள். நான் பிரசாரங்களில் பங்கேற்று விடக்கூடாது என்பதற்காக காலில் தாக்கினர். ஆனால் நான் ஒரு தெரு போராளி. என்னை அவர்களால் வீழ்த்த முடியாது.



இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb26

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது விவகாரத்தி

May21

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க கடந

Jun21

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் மாவட்டத்தில் குண்ட

Aug05

அதிமுகவை வழி நடத்தப்போவதாக சசிகலா அக்கட்சி தொண்டர்கள

Mar31

கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களை சுகாதாரத் துறை அமை

Feb05

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை ப

Jul25

சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் தங்கியிருந்த 38 இலங

May15

எதிர்வரும் மே 18ஆம் திகதி இலங்கையில் விடுதலைப் புலிகளி

Sep22

தருமபுரி நகரில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வில் ஈடுபட

Feb16

 கே.எஃப்.ஜே ஜுவல்லரியின் நகை சேமிப்பு திட்டத்தில் சே

Dec28

மறைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.ப

Apr24

உள்துறை மந்திரி அமித்ஷா இன்று புதுச்சேரி செல்கிறார்.

Jan29

விவசாயிகள் போராட்டம், டிராக்டர் பேரணியில் நடந்த வன்மு

Feb13

குர்கிராமில் நடைபெற்ற பணியாளர் அரசு காப்பீட்டு கழக (இ.

Jun01

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (05:00 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (05:00 am )
Testing centres