வங்காள தேசத்தின் தேசிய தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நாள் மற்றும் நாட்டின் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டங்கள் அங்கு கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த 17-ந் தேதி தொடங்கிய இந்த விழா வருகிற 27-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்த விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக வருகிற 26-ந் தேதி வங்காளதேசம் செல்கிறார்.
இந்தநிலையில் பிரதமர் மோடியின் வருகைக்கு எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இல்லை என வங்காளதேச அரசு உறுதியளித்துள்ளது.
அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ஏகே அப்துல் மோமன் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இதுகுறித்து கூறியதாவது:-
பிரதமர் மோடியை வங்காளதேசத்துக்கு அழைப்பதில் பெருமிதம் கொள்கிறோம். அவரின் பயணத்துக்கு எந்த அச்சுறுத்தல்களும் இல்லை. சில இடதுசாரி மற்றும் முஸ்லிம் இயக்கங்கள் அவரது வருகையை எதிர்க்கின்றன. அவர்கள் அதை செய்யட்டும். அவர்களால் எந்த பிரச்சினையும் இல்லை. மோடி உள்பட விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து வெளிநாட்டு விருந்தினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
சீனா தனது அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட
உக்ரைனின் Luhansk பகுதியில் ரஷ்யப் படை வீரர்களின் முன்னேற
உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் தனது காதலிக்கு இ
சிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர்கள் பயணித்
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில
தாய்வானில் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் உள்பட
உக்ரைனின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ விர
அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்
உக்ரைனிய நகரங்கள் மீது 120க்கும் மேற்பட்ட ரஷ்ய ஏவுகணைகள
