அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற ஜோ பைடன் தனது நிர்வாகத்தின் பல முக்கிய பொறுப்புகளுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களை நியமனம் செய்துள்ளார்.
அந்த வகையில், அமெரிக்காவின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தியை, ஜனாதிபதி ஜோபைடன் நியமனம் செய்தார். இந்த நிலையில் இவரது நியமனத்துக்கு செனட் சபை அண்மையில் ஒப்புதல் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து விவேக் மூர்த்தி அமெரிக்காவின் 21-வது தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக சில தினங்களுக்கு முன்பு பதவியேற்றுக்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில் ‘‘உங்கள் அறுவை சிகிச்சை நிபுணராக பதவியேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஒவ்வொரு அடியிலும் என்னை வழிநடத்திய மற்றும் ஆதரித்த எனது குடும்பத்துக்கு இந்த நாள் நான் கடமைப்பட்டுள்ளேன்’’ என்றார்.
தொடர்ந்து அவர் ‘‘இந்த கொரோனா தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் அனைவரின் பிடியிலும் நல்ல ஆரோக்கியமுள்ள ஒரு உலகத்தை உருவாக்குவதற்கும் நான் உங்களுடன் பணியாற்ற தயாராக இருக்கிறேன். அதோடு அறிவியலுக்கான குரலாக இருப்பதற்கும் மறு கட்டமைப்பு மற்றும் குணப்படுத்துவதற்கான பாதையில் நம் தேசத்தை ஆதரிப்பதற்கும் தேசத்தின் மருத்துவராக இந்த நிலையை ஏற்க தயாராக உள்ளேன்’’ எனவும் கூறினார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்
உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த வியாழக்கிழம
பல்வேறு நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்கு
உக்ரைனின் மரியுபோலில் இரும்பு ஆலைக்குள் தஞ்சமடைந்தி
உக்ரைன் மீது 20 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வர
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் உரு
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது 32-வது ஒலிம்பிக் ப
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியை விடுதலை செ
இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான
அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் நாக்ஸ்வில்லே நகரில் உ
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் திடீரென தனது த
ரஸ்யா சீனாவிடம் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை கோரு
மலேசியாவை இன்னொரு இலங்கையாக மாற்ற வேண்டாம் என்று எச்ச
