அமெரிக்காவில் சமீப காலமாக பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவது அதிகமாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட, 10 பேர் இதுபோல் சுட்டுக் ெகால்லப்பட்டனர்.
இந்நிலையில், கலிபோர்னியா மாகாணத்தின் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஆரஞ்ச் பகுதி, எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். இங்குள்ள லிங்கன் அவின்யூவில் உள்ள 2 மாடி கட்டிடத்தில் நேற்று புகுந்த மர்ம நபர், அங்கு இருந்தவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டினான்.
இதனால், மக்கள் தப்பியோட முயன்றனர். அவர்கள் மீது அந்த நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில், குழந்தை உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், தப்பி ஓட முயன்ற அந்த நபரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மேலும், காயமடைந்த நபர்களும் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கள் இருப
தெற்கு ஒக்ஸ்போர்ட்ஷையரில் ஆயிரக்கணக்கான புதிய வீடுக
உக்ரைன் மீதான போர் இரண்டு வாரங்கள் கடந்தும் போர் தொ
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பேஸ்புக் டுவ
ரஷ்யா பின்வாங்கியதை அடுத்து 3000க்கும் மேற்பட்ட வாடிக
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத
உகாண்டா நாட்டில் நடைபெறும் சர்வதேச பாரா பேட்மிண்டன் ப
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்கு திடீரென்
உக்ரைனுக்கு ஆதரவாக போரில் கலந்து கொல்வதற்காக ராணுவத்
ஜம்மு- காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் இந்திய எல்லைக
மேற்கு லண்டனில் தாயார் ஒருவர் தமது 5 வயது மகளை கழுத்தை
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் தம்பா நகரில் 77 ஏக்கர் ந
கருங்கடலில் உள்ள ரஷிய போர்க்கப்பலை உக்ரைன் அழித்ததைய
உக்ரைய்ன் மீது குறைவான விமானத் தாக்குதல்கள் இடம்பெற்
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநா
