இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு. 95 வயதான இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் சேர்ந்தனர். அங்கு ஆர்.நல்லகண்ணுவை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து அம்மருத்துவமனை 'டீன்' டாக்டர் தேரணிராஜன் கூறியதாவது
கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் சளி உள்ளிட்ட பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா அறிகுறி உள்ளதால், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்தோம். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமுடன் உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே ஆர்.நல்லகண்ணு விரைந்து நலம்பெற்று, மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு 2020
அ.தி.மு.க. சார்பில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஏழைகளின
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இத
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு
அகில இந்திய காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து மிக மோசமான ப
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள்
தமிழ்நாட்டில்
தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலைவா உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ண தமிழகத்தில் ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பய தி.மு.க. தலைவ இந்தியா முழுவதும் கொரோனாவின் 2-வது அலை மின்னல் வேகத்தி டி.ஜி.பி.அலுவலகம் சார்பில் நேற்று வெளியிட்ட செய்திக்க சர்வதேச ரீதியில் இன்று இலங்கை பேசுபொருளாக மாறியுள்
