இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அன்று முதலே மிகவும் வேகமாக நடந்து வரும் இந்த பணிகள், தற்போது கொரோனாவின் 2-வது அலை தாக்கி வரும் சூழலில் மேலும் வேகமெடுத்துள்ளது.
நாள்தோறும் லட்சக்கணக்கான தடுப்பூசி டோஸ்கள் பயனாளர்களுக்கு போடப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியாவில் போடப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை நேற்று 9 கோடியை கடந்து விட்டது.
நேற்று காலை 7 மணி நிலவரப்படி மொத்தம் 9 கோடியே 1 லட்சத்து 98 ஆயிரத்து 673 டோஸ்கள் போடப்பட்டு இருந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதில் சுகாதார பணியாளர்கள் 89,68,151 (முதல் டோஸ்), 54,18,084 (2-வது டோஸ்), முன்கள பணியாளர்கள் 97,65,538 (முதல் டோஸ்), 44,11,609 (2-வது டோஸ்), 60 வயதுக்கு மேற்பட்டோர் 3,63,32,851 (முதல் டோஸ்), 11,39,291 (2-வது டோஸ்) என லட்சக்கணக்கானோர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இதைப்போல 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2,36,94,487 (முதல் டோஸ்), 4,66,662 (2-வது டோஸ்) பலருக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதுவரை போடப்பட்ட டோஸ்களில் 60 சதவீதம் 8 மாநிலங்களில் போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் நகரத்தின் பாபா மொஹல்லா என்ற இ
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ண
சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்ச நோய் மருத்துவ
தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்காக
எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் தனியார் விமானத
தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப்
கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உ
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன
பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நலத்திட்டங்களை தொடங்கி
மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் டாக்டர் இந்திரா (வயது 60). இவர
முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தன்னை நேரில் சந்தித்துப்
நெல்லை மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் கலைச்ச
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம
கொரோனா அச்சுறுத்தலால் அரசியல் கட்சியினர் பிரசாரம் மே
