தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலான்ட் இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலேசியா மற்றும் கொரியாவின் முதலீட்டுடன் கொரிய நிறுவனமான Korea Cavitation Co வினால் இதன் நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
டிஸ்னிலான்ட் அமைப்பதற்காக 150 ஏக்கர் காணியை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக கொரிய நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.
பிரதானமாக கொரியா மற்றும் மலேசியா உட்பட நாடுகளிடம் இருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நிதி உதவி இந்த திட்டத்திற்கு பெறுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு முன்னர் 30 வீதம் நிதி சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்ற நிலையில், தடுப்பூசி போடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதனால் இந்தியாவும் முதலீடு செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டம் மலேசியாவின் Genting Highlands திட்டத்திற்கு சமமானதாகும். இதில் விசேட ரயில் வீதி உட்பட பல்வேறு விடயங்களை உள்ளடக்க எதிர்பார்ககப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு 300 அறைகள் கொண்ட ஹோட்டல்களையும் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த ஈரான் நாட்டைச் ச
வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எத
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில்
தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண
மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான சாத்தியம் ம
முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்க
இலங்கையிலுள்ள ஒவ்வொரு ஐந்து குடும்பங்களில் நான்கு கு
இலங்கையில் 103 வயது மூதாட்டி ஒருவருக்கும் கொரோனாத் தடுப
இரத்து செய்யப்பட்ட பல ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்
இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல எனவும் ஆதிக் குடிகளாக தமிழ
பரசூட்டில் பயணித்த வெளிநாட்டவர் ஒருவர் தவறி விழுந்து
பாரிய மருந்து தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத
இந்திய விசாவை பெருந்தொகையான பணத்திற்கு வழங்கிய குற்ற
கோப்பாயில் சட்டத்துக்குப் புறம்பாக கலப்பட மதுபான உற்
இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட ப
