யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. வவுனியா வளாகத்தில் கல்விபயிலும் கண்டியைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு கோவிட் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
விடுமுறையில் சென்ற அவர் மீண்டும் பல்கலைக்கழகம் திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த மாணவி கிளிநொச்சி கோவிட் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனையடுத்து பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியின் ஒருபகுதி சுமார் 400 மாணவர்களுடன் இன்றுமுதல் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து வெளிச்செல்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அவர்களிற்கு கட்டம், கட்டமாக பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமாக
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் இருந்து ஆடைத் தொழிலாள
காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தை சீர்கு
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதி
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 3
இன்றைய நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20ஆம் திருத்தத்தின்
அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து பொதுமக்களிடமோ அ
இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் க
கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு
நில ஆக்கிரமிப்பு தொடர்பாக சர்வதேச நாடுகள் மற்றும் சர்
கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி தீவக மக்
யாழிற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல
நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரச சேவையாளர்களுக்கு மா
பொதுமக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை முன்னெ
