அசாம் மாநிலத்தில் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6- தேதி நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மே 2-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில் தற்போது பிரச்சாரம் முடிவை எட்ட உள்ளது.
இந்நிலையில், அசாம் மாநிலத்தில் நேற்று மதிய வெயிலில் பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது பா.ஜ.க.வின் அசாம் தொண்டர் ஒருவர் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
இதை கவனித்த பிரதமர் மோடி உடனே பிரசாரத்தின் நடுவே ‘‘நமது தொண்டர் ஒருவருக்கு நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நமது அவசர உதவி மருத்துவ உதவிக்குழு எங்கிருந்தாலும் உடனே வந்து அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று ஒலிபெருக்கியில் அறிவித்தார். உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பிரதமரின் இந்த செயல் கூட்டத்தில் கர ஒலி மற்றும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவ
வீட்டில் துாங்கி கொண்டிருந்த தம்பியை,அண்ணன் சரமாரியா
ரெயில்வே துறையில் தனியாரையும் அனுமதிக்கும் திட்டத்த
பாலஸ்தீனத்தில் ரமல்லாவில் உள்ள இந்திய தூதகரகத்தில், இ
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாத
உத்தர பிரதேச மாநில அரசு 4 லட்சம் பேருக்கு வேலை வழங்கியத
இந்தியாவுக்கான புதிய பாராளுமன்ற கட்டிடம் டெல்லியில்
நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பொதுப்ப
கொரோனா 2-வது அலையுடன், கருப்பு பூஞ்சை நோயும் நாட்டு மக்
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நீடித்துவரும் நிலையில் ,
சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் தங்கியிருந்த 38 இலங
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று ந
மேற்கு வங்காளத்தில் இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு மீதம
சென்னை கொடுங்கையூரில், கடந்த 14-ந் தேதி, வியாசர்பாடியை ச
