இலங்கைக்குத் தேவை மனிதர்களைப் படுகொலை செய்யும் ஹிட்லர் பாணியிலான ஆட்சியல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அத்துடன் மக்களை வாழ வைக்கும் ஆட்சியே தேவை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எதேச்சதிகாரத்துக்கு விரைவில் முடிவு கட்டுவோம் எனவும் அவர் உறுதிப்படக் கூறினார்.
செல்லக்கதிர்காமம் – கரவிலே பிரதேசத்தில் 350 குடும்பங்களுக்கு அரிசியை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் உலகத்துக்குப் பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர்.
நண்பர்களே எமக்குத் தேவை மனிதர்களைப் படுகொலை செய்யும் ஹிட்லர் ஆட்சியல்ல. எமது நாட்டுக்குத் தேவை கொலை கலாசாரம் அல்ல.
நாம் தற்போது செய்ய வேண்டியது கொலைகளை அல்ல. மக்களை வாழ வைக்க வேண்டியதையே நாம் செய்ய வேண்டும்” – என்றார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேவையேற்படின் ஹிட்லராகவும் மாறுவார் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துக்குப் பதிலளிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கு
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன
கொரோனா பாதிப்பால் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தி
நாளாந்தம் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணி
மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு நிலைப்பாட்டி
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உடல் நிலை மோசமாகியுள்ளதாக
நாடு பூராகவும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில்&nbs
கடந்த மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் காலத்தில் நடந்த ப
நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் இன
தாமரை கோபுரம் திறக்கப்பட்ட 15ஆம் திகதி முதல் நேற்று வரை
பதுளை − ஹாலிஎல பகுதியில் பாடசாலை மாணவியை கோடாரியால்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக
ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பை ஜனாதிபதி திட்டம
இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் கனடா செல்ல தமிழகத்
எதிரிப் படைகளைத் தோற்கடிப்பது போன்றே, கொரோனா – 19 தொற்
