More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அபுதாபிக்கு அரசுமுறை பயணமாக இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்!
அபுதாபிக்கு அரசுமுறை பயணமாக இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்!
Apr 19
அபுதாபிக்கு அரசுமுறை பயணமாக இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்!

அமீரகத்துக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 17-ந் தேதி பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி மந்திரி ஷா மஹ்மூத் குரேசி துபாய் வந்தார். தொடர்ந்து நேற்று அவர் துபாயில் நடைபெற உள்ள எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் பார்வையிட்ட அவர், அமீரகம் சமரசம் செய்வதற்கு பாகிஸ்தான் வரவேற்பு தெரிவிப்பதாக கூறினார். இது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்த நிலையில், இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக நேற்று அபுதாபிக்கு வந்தடைந்தார். அவரை அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகத்துக்கான மந்திரி ஷேக் அப்துல்லா பின் ஜாயித் அல் நஹ்யான் வரவேற்றார்.



இதற்கிடையே இந்திய-பாகிஸ்தான் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் அமீரகம் வந்திருப்பது பல்வேறு விதத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கடந்த ஆண்டில் நவம்பர் மாதம் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது இருதரப்பு விவகாரங்கள் குறித்து இரு வெளியுறவு மந்திரிகளும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினர்.



இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மஹ்மூத் குரேசியும் 3 நாள் சுற்றுப்பயணமாக அமீரகம் வந்துள்ளதை மேற்கோள் காட்டி, அமெரிக்காவுக்கான அமீரக தூதர் யூசெப் அல் ஒதைபா, இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றத்தை குறைப்பதிலும், இருதரப்பு உறவுகளை ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு செல்வதிலும் அமீரகத்திற்கு பங்கு உள்ளது என டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இதற்கிடையே அமீரகம் இருநாட்டு பிரச்சினைகளில் சமரசத்தில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளது என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.



இதனை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சு வார்த்தை குறித்த கேள்விக்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேரடி பதிலை தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையில் ஏதாவது பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா? என்பது முக்கியமல்ல. ஆனால் இருநாடுகளுக்கு இடையே என்ன பிரச்சினை உள்ளது? என்பது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என கூறி முடித்துக்கொண்டார்.



இந்தியாவில் புல்வாமா குண்டுவெடிப்பு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டனர். கூடுதலாக கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக அறிவித்ததை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளது.



இந்த நிலையில் அமீரகம் வந்துள்ள இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளின் சந்திப்பு நடைபெறுமா? இதேபோல அமீரகம் சமரசம் செய்து இருதரப்பு பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யுமா? என்பது இருநாடுகளின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May25

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் சாச்சைக்குரிய மொழிச் ச

Aug07

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது 32-வது ஒலிம்பிக் ப

Mar07

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியை வெளிக் கொண்டுவரவும் பாத

Jan31

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டேவிஸ் நக

Apr27

ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் 2 இடங்களுக்கும், க

Feb25

உக்ரைன் மீது ரஷ்யா இன்றையதினம் சரமாரியான தாக்குதலை தொ

Feb01

ஆர்ஜென்டினாவில் கொரோனாத் தொற்றுப் பலவல் காரணமாக அந் ந

Jul16

ஜெர்மனியில் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெர

May30

அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்

Jul23

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில

Mar05

ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித

May08

உக்ரைன் கிழக்கில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள பாடச

Sep28

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் 23 வயதான சீ

Mar09

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Mar21

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 26வது நாளை எட்டி

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (13:41 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (13:41 pm )
Testing centres