கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் 6 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். அடுத்த சில நிமிடங்களில், டெல்லியில் உள்ள மதுக்கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது.
கடைகளுக்கு முன்பு நீண்ட வரிசை காணப்பட்டது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் மணிக்கணக்கில் காத்திருந்து மது பாட்டில்களை வாங்கினர்.
ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு எண்ணற்ற பாட்டில்களை வாங்கினர். தெற்கு டெல்லியில் ஒரு மதுக்கடையில் நின்றிருந்த ரவீந்தர் சக்சேனா என்பவர் 8 பாட்டில்கள் வாங்கப்போவதாக கூறினார்.
வரிசையில் காத்திருந்தபோது சிலர் வரிசையை மீறி முன்னால் செல்ல முயன்றதால் வாக்குவாதமும் ஏற்பட்டது. 6 நாட்களுக்கு ஊரடங்கு என்று அறிவித்தாலும், அது நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதால், மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்வது நல்லது என்று மது பிரியர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஊரடங்கின்போது, கள்ளச்சந்தையில் இருமடங்கு விலை கொடுத்து மது வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக சிலர் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
இதற்கிடையே, மதுபான நிறுவனங்களின் சங்கம், மராட்டியத்தை போல் டெல்லியிலும் மதுவை வீடுகளுக்கு நேரில் சென்று வினியோகிக்குமாறு வலியுறுத்தி உள்ளது.
டெல்லியில் நேற்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்ற
அசாம் மாநிலத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை
இந்தியாவின் சொத்துகளை நட்பு முதலாளிகளிடம் விற்பனை செ
தமிழக சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர தொகுதியாக சென்னை ஆ
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கல்வி நிற
கடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 51-வது வார்டில்
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணி
பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை அதிகளவில் இருக்க
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகியுள்
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவு எட
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த நண்பரின் மனைவியை இள
உத்தர பிரதேசத்தில் ஒன்றிய இணை அமைச்சர், மாநில துணை முத
கொரோனா தொற்று பரவலால் சமீப காலமாக
